January 24, 2011

த்யாகு புக் சென்டரில் ஜெயமோகன்…........


எங்கள் நூலகத்திற்க்கு வருகைபுரிந்த ஜெயமோகனுடன் சில மணித்துளிகள்.........

எண்ணிலடங்கா எழுத்து தச்சர்கள் செதுக்கிய புத்தகங்களின் நடுவே புன்னகையுடன் ஜெயமோகன்,  


20-12-2010 திங்கள் காலையில் உற்சாகத்துடன் த்யாகு புக் சென்டருக்குள் புகுந்தேன், விளக்கேற்றி சாமிகும்பிட்டு நெற்றியில் திருநீரிட்டு வேலைகளை ஆரம்பித்தேன். முதல் காரியமாக த்யாகுசாருக்கு தொலைபேசியில் அழைத்தேன், அன்று அவர் திருவண்ணாமலை போகவில்லை, 10 மணிக்கு த்யாகுசாரும்,சுரேஷ்சாரும் நூலகத்திற்க்குள் வந்தார்கள், விஷ்ணுபுரம் விருதுவிழாவை பற்றி அபிபிராயங்கள் இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டார்கள். அப்போதுதான் தெரிந்தது ஜெயமோகன் ஊரில் இருக்காங்க என்று... தெரிந்தவுடன் த்யாகு புக் சென்டருக்கு அவரை அழைத்து கொண்டுவர முடிவாயிடுச்சு, சந்தோஷத்துடன் நானே அவரை அழைத்து வருகிரேன் என்ற பொறுப்பை ஏற்று கொண்டார் சுரேஷ்சார்.... அவர் ஜெயமோகன் பேச்சுக்கு அடிமையானவர்.... இரண்டு தினங்களாக வேலைக்கும் வீட்டுக்கும் போகாமல் அவருடனே இருக்கிறார்.
ஜெயமோகன் வருகிறார் என்று தெரிந்தவுடன் சுறுசுறுப்பாக வேலைகள் ஆரம்பமாகிவிட்டன, த்யாகுசாரின் நண்பர்கள் கூட்டத்திற்க்கும் அழைப்புக்கள் சென்றுவிட்டன. இருக்கைகள் எடுத்து துடச்சு அடுக்கப்பட்டன. 11 மணிக்கு டான் என்று வந்து சேர்ந்தார் நண்பர் செல்வேந்திரன், அவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர், அவரும் எங்கள் வேலைகளில் பங்குகொண்டார், இனிப்பும், காரமும் வாங்கி வந்தார் த்யாகுசார்..........
11.30 மணிக்கு ஜெயமோகனைக் காண ஆர்வத்துடன் வந்தார் எங்கள் கலைவாணி அக்கா, அதற்க்குப்பின் மித்திரன் சார் அவர்களும் வந்துசேர்ந்தார், மற்ற நண்பர்களை அவரே தொலைபேசியில் அழைத்தார், ஆனந்துசாரின் மாணவன் அருண் வந்தார்...
அமைதியாக வந்து அமர்ந்தார் உலக புகழ்ப்பெற்ற புகைப்பட நிபுணர் ஜெய்ராம்சார் அவர்கள்,  கோணங்கள் பிலிம் சொசைடியில் இருந்து ஆனந்த் சார் வந்திருந்தார்,       
பாலு என்கிற கோயமுத்தூர் பாலசுப்ரமணியம் அவர்களும் வந்து சேர்ந்தார், இதுக்கு எதற்க்கும் சம்பந்தமில்லாமல் யதேச்சையாக வந்து மாட்டி கொண்டார் நம்ம மாதவன்சார் அவங்க..... மற்றவர்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

    நூலகத்திர்க்குள் புத்தகம் எடுப்பவர்களின் கூட்டம் ஒரு பக்கம் நண்பர்கள் கூட்டம் ஒரு பக்கம் என திருவிழாக்கோலம் பூண்டது எங்கள் நூலகம்...........

ஜெயமோகனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். அவரை கூட்டிகொண்டுவரும் பொருப்பை ஏற்று இருந்தார் சுரேஷ்சாரும், சிவகுமார்சாரும், 12.30 மணியளவில் நூலகத்திற்க்குள் வந்து சேர்ந்தார் எங்கள் விழா நாயகன்
திரு.ஜெயமோகன் அவர்கள்.
உற்சாகத்துடன் வரவேற்றார் எங்கள் த்யாகுசார், அவரின் முகத்தில் ஒரு சின்ன குழந்தையின் குதூகலம் எங்களை அறிமுகப் படுத்தினார்.......
நூலகத்தை முதலில் சுற்றி பார்க்க கிள்ம்பி விட்டார், அவசரமில்லாமல் நிதானமாக ஒவ்வொரு ராக்கையும் பார்த்து கொண்டுவந்தார், அவருடன் வேறு சில நண்பர்களும் இருந்தார்கள். நிதானமாக வந்து உக்காந்து பேச்சை ஆரம்பித்தார், கூடவே இனிப்பும் காரமும், டீயும் பகிர்ந்து கொண்டார்கள்.
அவருக்கு ஸ்பெஷல் பிளாக் டீ........ 
நிறுத்தாமல் பேசிகொண்டே இருந்தார் அவரின் மலையாளமும் அழகாகத்தான் இருந்தது. இதற்கிடையில் நாஞ்சில்நாடன் அவர்களுக்கு சாகித்திய அகாதெமி விருது உருதிசெயப்பட்ட விஷயத்தை செல்வேந்திரன் அவர்கள் சொன்னார் எல்லோருக்கும் இரட்டிப்பு சந்தோஷம்.
நானும் அக்காவும் ஒரு ஓரத்தில் இருந்து அவர் பேச்சை கவனித்தோம். என் காதில் எந்த பேச்சும் விழவில்லை.....
அவரைப் பார்த்ததே சந்தோஷம் என்று நினைத்தேன். அவரின் புத்தகம் படித்ததே இல்லை, அவருடன் பேசியதில்லை எல்லாமே கேள்வி ஞானம் மட்டும்தான்......... அவரைப் பார்த்ததும் வந்த சந்தோஷத்திர்க்கு அளவே இல்லை..... ஒரு மாபெரும் எழுத்துக் கலைஞனை கண்ட சந்தோஷமாக இருக்கலாம், வாழ் நாளில் மறக்க முடியாத நாள், 2.30 மணியளவில் எல்லோரும் சாப்பிடப்போக தயாராகிவிட்டார்கள், ஜெயமோகனுடன் ஒரு Lunch , கடைசியில் ஜெயமோகனுடன் எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம், பிரியும் வேளையிலும் எங்களிடவும் விடைபெற்றார் அந்த கலைஞன். ஒரு நல்ல மனிதனை பார்த்த சந்தோஷத்தில் நான், எளிமையான தோற்றம், இடைவிடாத பேச்சு, மலயாளம் கலந்த தமிழ் மொழி, இவையெல்லாம் தான் அவரிடம் பிடித்திருந்த்து............
அவரைப் பார்த்த பிறகு தான் அவரின் படைப்புகளை படிக்க ஆசை உண்டாயிற்று.....மிக விரைவில் ஆரம்பிப்பேன்..........
த்யாகு சார் உங்களுக்கு ஓராயிரம் நன்றிகள் என்னையும் உங்கள் கூட்டத்திற்க்குள் சேர்த்தர்க்கு..
நன்றி.............
     நன்றி..........
           நன்றி............

3 comments:

  1. இனிமையான நிகழ்வு.

    ReplyDelete
  2. good,continue writing..god bless you.s.kumar[1106]

    ReplyDelete
  3. நண்பரே,
    தொலைதூரத்தில் இருந்தாலும், அருகிலுருந்த உணர்வு!!!
    சதீஷ் (மும்பை)

    ReplyDelete