March 21, 2014

சிவா.....த்ரிலாஜி....... அமிஷ் த்ரிபாதி


சிவா ........முதல் தொகுதி.....

”மெலுஹாவின் அமரர்கள்”

”இது ஒரு மனிதனின் கதை........

காலம்;  தெய்வமாய் மாற்றிய ஒரு மனிதனின் கதை.....!”







கி.மு. 1900 இன்றைய இந்தியர்கள்., சிந்து சமவெளி நாகரீகம் என்று தவறாக குறிப்பிடுவது வழக்கம்.
அன்று வாழ்ந்தவர்களோ.,அந்த நிலப்பரப்பை ” மெலுஹா....” என்றழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்., உலகின் மிகச் சிறந்த அரசர்களுள் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய அற்புதமான சாம்ராஜ்யம்.

புகழும் பெருமையுமாய் சிறந்து விளங்கிய இதன் ஆட்சியாளர்களான ”சூர்யவம்சிகள்” .,பல ஆபத்துகளை சந்திக்கின்றனர். அவர்களது ஜீவநதி சரஸ்வதி.,வற்ற ஆரம்பித்து ., முற்றிலுமாய் அழியத்துவங்கி விட்டது.

கிழக்கே வாழும் சந்திரவம்சிகளிடமிருந்து.,பயங்கர தீவிரவாதத் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர். நிலமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாக., சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு., விகாரமடைந்த முகமும் உடலுமாய்., பல அற்புத சக்திகள் படைத்த...”நாகர்கள்”என்னும் குலத்தாருடன் சந்திரவம்சிகள் கைகோர்த்துக் கொண்டது போலவும் தெரிகிறது.

இப்போது சூர்யவம்சிகளின் ஒரே நம்பிக்கை., என்றோ அவர்களிடையே பரவி.,
வேரூன்றிவிட்ட ஒரு ஆரூடம்..:.........


                           ”தீமை தலை விரித்தாடும் போது; 
                    அதன் கொடூரம் எல்லை மீறி.,
                    எதிரிகள் முழுமையாய் வென்று                          விட்டார்கள்;
                    இனி போக்கிடம் இல்லையென்ற நிலை                        ஏற்படும் போது ...............                                                             ஒரு வீரன் வருவான்”

யாரது...? கரடுமுரடான திபேத்திய நாட்டிலிருந்து குடி பெயர்ந்துவரும் சிவன்தானோ..?
உலகைக் காப்பாற்றும் அந்த வீரனாய் உருவாவதில் அவருக்குச் சம்மதம் தானா..?
கடமை மட்டுமல்லாது .,காதலாலும் கவர்ந்திழுக்கப்படுவர்., உண்மையில் சூர்யவம்சிகளை வழிநடத்தி,அவர்களுக்காகத் தீமையை அழித்து... விடுதலையளிப்பாரா...?

”சிவா”.... முத்தொகுதியில் இதுவே முதல் புத்தகம்.........
சாதரன மனிதன் ஒருவனின் பிறவிப்பயன்......
அவனை நம் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய்...,
மாகாதேவராய்.....மாற்றிய கதை.




2 comments:

  1. ”புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள ...அமிஷின்... இந்த சுவாரசியமான தொகுதி ., ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டு காட்டுகின்றது”
    .....................................................................................................தீபக் சோப்ரா.....................................

    ReplyDelete
  2. பாகம் 2 எப்பொழுதும் கிடைக்கும்

    ReplyDelete